![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220428_103117-scaled.jpg?fit=1024%2C460&ssl=1)
சகலகலாவல்லி வித்தியாலயத்தின் வகுப்பறை அபிவிருத்திப் பணிக்காக மறவன்புலோ மத்தியை சேர்ந்த பாடசாலையின் பழைய மாணவி கருணாகரன் தங்கமணி அவர்கள் 25,000 ரூபாய் பெறுமதியான அரிகற்களை அன்பளிப்பு செய்துள்ளார்.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220428_211248.jpg?resize=640%2C288&ssl=1)
குறித்த வகுப்பறை அபிவிருத்திக்காக இரண்டரை இலட்சம் ரூபாய்கள் மேலதிகமாக தேவைப்படுவது குறித்து பழைய மாணவர் சங்கம் விடுத்த வேண்டுகோளின் பேரில் குறித்த அரிகற்களை இலவசமாக வழங்கியுள்ளார். அவர் மறவன்புலோ கிராமத்தின் பொது அமைப்புக்கள் பலவற்றின் உறுப்பினராகவும் சமூக சேவையிலும் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவதுடன் இதுபோன்ற முன்மாதிரியான விடயங்களில் தன்னாலான உதவிகளை வழங்கி வருபவர்.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220428_103117.jpg?resize=640%2C288&ssl=1)
அவர் பாடசாலையின் மீது கொண்டுள்ள பற்றை பாராட்டும் அதேவேளை இதேபோன்று சிறுதுளி பெருவெள்ளம் போன்று ஏனையவர்களும் தாமாக உதவிபுரிய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை பழைய மாணவர் சங்கம் கேட்டு நிற்கின்றது.