![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220428_103207-scaled.jpg?fit=1024%2C460&ssl=1)
சகலகலாவல்லி வித்தியாலயத்தின் வகுப்பறை அபிவிருத்திப் பணிக்காக மறவன்புலோ மத்தியை சேர்ந்த பாடசாலையின் பழைய மாணவி சகுலராசா புஸ்பலலிதா அவர்கள் ஐந்து சீமெந்து பைகேட்டுகளை அன்பளிப்பு செய்துள்ளார்.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220428_103207.jpg?resize=640%2C288&ssl=1)
குறித்த வகுப்பறை அபிவிருத்திக்காக இரண்டரை இலட்சம் ரூபாய்கள் மேலதிகமாக தேவைப்படுவது குறித்து பழைய மாணவர் சங்கம் விடுத்த வேண்டுகோளின் பேரில் குறித்த சீமெந்து பைகேட்டுகளை இலவசமாக வழங்கியுள்ளார். தாமாகவே முன்வந்து இவ்வாறான உதவியை வழங்கியமைக்காக பாடசாலை சமூகம் சார்பில் அவர்களுக்கு எமது நன்றியினை தெரிவித்துக் கொள்வதோடு பாடசாலையின் மீது அவர் கொண்ட பற்றை பாராட்டுகின்றோம். சிறுதுளி பெருவெள்ளம் போன்று ஏனையவர்களும் தாமாக உதவிபுரிய முன்வர வேண்டும் என்ற கோரிக்கையினை பழைய மாணவர் சங்கம் வேண்டி நிற்கின்றது.