![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/271173920_3107436179526235_6463911459151678105_n.jpeg?fit=1024%2C473&ssl=1)
சகலகலாவல்லி வித்தியாலய பழைய மாணவர் சங்கக் கூட்டம் பாடசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது பாடசாலையின் எதிர்கால நலன் கருதி இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த பழைய மாணவர் சங்க யாப்பில் திருத்தம் இன்றைய தினம் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு அமைய சங்கத்தின் செயலாளர் எஸ் முரளி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புலம்பெயர்ந்து வாழ்கின்ற பழைய மாணவர்களுடன் தொடர்பினை பேணுவதற்காக சங்கத்தின் சார்பில் சர்வதேச தொடர்பாடல் ஒருவரை நமது தாய் சங்கம் இலங்கையில் நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக சங்கத்தின் பழைய பொருளாளரும் தற்போதைய கணக்கு ஆய்வாளருமான சிவரூபன் சர்வதேச தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புலம்பெயர்ந்து இருக்கின்ற எமது பாடசாலை பழைய மாணவர்கள் தம்மாலான உதவிகளை வழங்க முன்வரும் போது அந்த நாடுகளில் நமது தாய் சங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள பழையமாணவர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களை தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம். இவர்களைத் தொடர்பு கொள்வதன் ஊடாக உங்கள் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும் என்ற செய்தியை உங்களுக்கு அறியத்தருகின்றோம். சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கிணங்க அனைவரும் ஒன்றிணைந்து மறவன்புலோ கிராமத்தில் நமது பாடசாலை இணையும் முன்னேற்றம் செய்வதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு இத்தருணத்தில் மறவன்புலோ சகலகலாவல்லி பழைய மாணவர் சங்கம் வேண்டிக் கொள்கின்றது.