![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/05/20220520_124007.jpg?fit=310%2C372&ssl=1)
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எழுதி சாதனை படைத்த மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வின் செலவுகளுக்காக மறவன்புலவு கிழக்கைச் சேர்ந்த வரும் தற்போது லண்டன் நாட்டில் வசித்து வருபவருமான பழைய மாணவி ஜெகன் சாருமதி அவர்கள் ரூபா 25000 அன்பளிப்பாக வழங்கியிருந்தார் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்வதற்கு முன்பதாக பழையமாணவர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் தாய்நாட்டில் கைகோர்த்து செய்யப்பட்டவர் இளைஞர் சேவை மன்றம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதனூடாக அதன் உறுப்பினர்களை பயன்படுத்தி யுத்தத்தினால் அழிவடைந்து காணப்பட்ட பாடசாலையில் சுற்றுப்புறச் சூழல்களை சிரமதானம் மூலம் அழகு படுத்துவதில் முன்னின்று செயற்பட்டவர் தூர தேசத்தில் இருந்தாலும் பாடசாலை மீதும் கிராமத்தின் மீதும் கொண்ட பற்றுறுதியை பழைய மாணவர் சங்கம் வரவேற்கிறது
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/05/20220520_124007.jpg?resize=310%2C372&ssl=1)